(இராஜதுரை ஹஷான்)

இடைக்கால அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் சம்பளத்தை தற்போது அதிகரிக்க இயலாது. அரச ஊழியர்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் எவ்வித மாற்றங்ளும் இன்றி நிறைவேற்றப்படும் என தகவல் மற்றும் தொடர்பாடல் மற்றும் உயர்கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மாத்திரமே மக்களாணையுடன் நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் மக்களால் நியமிக்கப்படவில்லை.
இடைக்கால அரசாங்கத்தினால் ஒரு வரையறைகளுக்குட்பட்டே செயற்பட முடியும். அனைத்து பிரச்சினைகளுக்கும் துரிதமான தீர்மானங்களை தற்போது மேற்கொள்வது கடினமானது.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெற்றுள்ளன.

இடைக்கால அரசாங்கத்தினால் தற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இயலாது. வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றம் ஆகியவற்றிற்கு தேவையான அடிப்படை விடயங்கள் குறித்தே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆட்சி மாற்றத்திற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு அதிகளவு செல்வாக்கு செலுத்தின. பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் அரச ஊழியர்கள் தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் எவ்வித மாற்றமும் இன்றி நிறைவேற்றப்படும்.
பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியமைக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்துக்களும் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.


ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாது என்று பாதுகாப்பு செயலாளர் துருக்கி தூதுவரிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்றைய தினம் (30) நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.




பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு மாணவ குழுக்களை ஒரே தடவையில் உள்வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளளதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை இதுவரையும் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்க முடியாதுள்ளதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பல்கலைக்கழக கட்டுப்பாட்டளருடன் கலந்துரையாடி விரைவான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

AdaDerana 

தேசிய மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ரூமி மொஹமட் அவர்களை ஜனவரி 6 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வெள்ளை வேன் சம்பந்தமாக நடாத்திய ஊடக சந்திப்பில் பங்குபற்றிய இருவருக்கும் 20 இலட்ச ரூபா வழங்கிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



உலகமே எதிர்பார்த்திருந்த 2020 புதுவருடம் நியூசிலாந்தில்  ஆரம்பமாகியுள்ளது. அதனை முன்னிட்டு அங்கு கோலாகலமான முறையில் வரவேற்கும் கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்ற வண்ணமுள்ளன.

நேரடி வீடியோ



ராஜபக்ஷக்களை முஸ்லிம்களின் எதிரிகளாகக் காட்டிய முஸ்லிம் தலைவர்கள் இன்று வாயடைத்துப் போயுள்ளனர்
- ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் காட்டம்

( ஐ. ஏ. காதிர் கான் )

   ராஜபக்‌ஷக்களுக்கு எதிரான போலிப் பிரச்சாரங்கள் புஷ்வாணமாகிவிட்டன. தேசிய காங்கிரஸின் துணிச்சலே என்னையும் தைரியமூட்டியது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய காங்கிரஸ் சரியாக அடையாளம் கண்டதுபோல், கொழும்பு மேயராக இருந்த காலத்தில், தானும் சரியாக அடையாளம் கண்டதாக,  வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.

   "காந்தா சவிய" (மகளிர் சக்தி)  அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலைக் குழந்தைகளுக்கு கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள்  வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் (28)  நடந்த இவ்வைபவத்தில் ஆளுநர் முஸம்மில் மேலும் உரையாற்றும்போது, 

   பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகச் செயற்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ,  எதிர்காலத்தில் நாட்டின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரென, கொழும்பு மாநகர சபையின் மேயராக இருந்தபோதே, நான் தீர்மானித்தேன்.

   தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடுகளை நுணுக்கமாக அவதானிக்கும் வாய்ப்பு, கொழும்பு மேயராக நான் இருந்த காலத்தில் எனக்குக் கிடைத்தது.  பாதுகாப்புச் செயலாளராக இருந்து அவர் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் அனைத்தும் கச்சிதமானவை. நேர்த்தியான வேலைகளைத் திட்டமிடுவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அவர் சளைத்ததில்லை.கொழும்பு நகரின் அழகை அவதானித்தால், ஒரு டொபி சருகையைக் கூட வீதியில் வீசுவதற்கு மனம் முன்வராது. இது அச்சத்தினால் ஏற்பட்ட உணர்வல்ல. அழகினால் கவரப்பட்ட மனங்களின் வௌிப்பாடாகும்.இவ்வாறான செயல் வீரரை அடையாளம் கண்டு அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு, தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.  அதாஉல்லா முன்வந்தமை என்னையும் தைரியமூட்டியது.

ஆனால், முஸ்லிம்களின் தலைவர்களெனக் கூறித்திரிவோர், எமது சமூகத்தைத் தொடர்ந்தும் தவறாகவே வழி நடத்துகின்றனர். வாக்குக ளுக்காகவும், ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கடமைப்பட்டதற் காகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தொடர்ந்தும் முஸ்லிம்களை ஏமாளிகளாக்குகின்றன.

   இங்குள்ள பலர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தது எனக்குத் தெரியாமலில்லை. எனினும்,  பெற்றோர் செய்த தவறுக்காக எதுவுமே அறியாத பச்சிளம் குழந்தைகளைப் பழிவாங்கக் கூடாது. பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவதற்கு நாங்கள் அரசியல் பேதம் பார்ப்பதில்லை. எனினும், இனியும் எமது சமூகத்தை ஏமாற்ற வருவோர் பற்றி நீங்கள் தௌிவாக இருக்க வேண்டும். ராஜபக்‌ஷக்களை முஸ்லிம்களின் எதிரிகளாகக் காட்டிய முஸ்லிம் தலைவர்கள், இன்று வாயடைத்துப் போயுள்ளனர். பெரும்பான்மைச் சமூகத்துடன் இணைந்து வாழ்வதே சிறுபான்மைச் சமூகங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பானது.

பெரும்பான்மைச் சமூகத்திலுள்ள பெரும்பான்மையினர் தீர்மானித்ததன் பின்னர், முஸ்லிம்கள் முரட்டுப்பிடிவாதத்துடன் செயற்படுவது, எமது குழந்தைகளின் எதிர்காலத்தையே ஆபத்துக்குள்ளாக்கிவிடும். "காந்தா சவிய" அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் 16 ஆவது தடவையாக இச்சிறப்புத் திட்டத்தை முன்னடெுத்துள்ளமை பாராட்டக்குரியது என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )





பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து திகைத்து நிற்கிறது குடும்பம் ஒன்று.

யாழில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்பத் தலைவர் மன்னாரில் பணி நிமிர்த்தம் அங்கு தங்கி பணியாற்றி வரும் நிலையில் தாயும், மகளும் யாழில் வசித்து வருகின்றார்கள்.

அந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் மகளின் கைத்தொலைபேசிக்கு, லண்டனில் நடந்த சீட்டிழுப்பு ஒன்றில் உங்களுடைய கைத்தொலைபேசி இலக்கத்திற்கு புதிய ரக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றும் ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும் விழுந்துள்ளதாகவும் அது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள கீழுள்ள மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதனை நம்பி குறித்த பெண் அந்த மின்னஞ்சலுடன் தொடர்பினை ஏற்படுத்திய போது, சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என கூறி சில போலி ஆவணங்கள், கார், காரின் திறப்பு படம் மற்றும் கட்டுக்கட்டாக ஸ்ரேலிங் பவுண்ஸ் உள்ள புகைப்படங்களை மின்னஞ்சல் ஊடாக மர்ம கும்பல் ஒன்று அனுப்பியுள்ளது.

அதன் பின்னர் மர்ம கும்பலின் மின்னஞ்சலில் இருந்து முதல் கட்டமாக லண்டனில் வரி கட்ட வேண்டும் என கோரி 92 ஆயிரம் ரூபாயை வங்கியில் வைப்பிலிடுமாறு கோரியுள்ளனர். அதனை நம்பி இவர்கள் வங்கியில் பணத்தினை வைப்பிலிட்டுள்ளனர்.

அதனை அடுத்து ஒரு கிழமை இடைவெளியின் பின்னர், திணைக்களங்களுக்கு வரி கட்ட வேண்டும் உள்ளிட்ட சில காரணங்களை கூறி மின்னஞ்சல்களை அனுப்பி கட்டம் கட்டமாக 31 இலட்ச ரூபா பணத்தினை அந்த மர்ம கும்பல் பெற்றுள்ளது.

இறுதியாக கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் உங்களுக்கான பணப் பரிசிலும், காரும் இலங்கைக்கு வந்து விட்டது எனவும் அதனை பெற்றுக் கொள்ள கொழும்பு வெள்ளவத்தை பகுதிக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது. அதனை நம்பி குறித்த குடும்பத்தினர் கொழும்பு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை சந்தித்த மர்ம நபர் ஒருவர் கறுத்த பெட்டி (சூட்கேஸ்) ஒன்றினை கொடுத்து, பரிசுத் தொகையான ஸ்ரேலிங் பவுண்ஸ் பணமும், காரின் திறப்பும் உள்ளது எனவும் கூறி அந்த பெட்டியை கையளித்துள்ளார்.

பெட்டியை உடனே திறந்து பார்க்காதீர்கள். இந்த பரிசுத் தொகை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிய வந்தால் இலங்கையில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் அத்துடன், வரியாக பெருந்தொகை கட்ட வேண்டி வரும் நீங்கள் வீடு செல்லுங்கள் இந்த பெட்டியின் திறப்பை தபால் மூலம் அனுப்பி வைக்கிறேன் என கூறி குறித்த மர்ம நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் வீடு திரும்பிய இவர்கள் சில தினங்கள் கடந்த நிலையிலும், திறப்பு வராத நிலையில் மின்னஞ்சல் ஊடாக அந்த மர்ம நபர்களை தொடர்புகொள்ள மின்னஞ்சல்களை அனுப்பிய போது பதில்கள் வரவில்லை. தம்மை கொழும்புக்கு அழைத்த தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, குறித்த தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டது.

அதனை அடுத்து சந்தேகம் அடைந்தவர்கள் குறித்த பெட்டியை உடைத்து பார்த்த போது , உடைந்த கண்ணாடி போத்தல்கள், பஞ்சு, நாணயத் தாள்கள் அளவில் வெட்டப்பட்ட கடதாசி துண்டுகள் என்பன காணப்பட்டுள்ளன. அதன்போதே அவர்கள் தாம் ஏமார்ந்ததை உணர்ந்துள்ளார்கள்.

குறித்த குடும்பத்தினர் சீட்டிழுப்பு பரிசினை நம்பி தம்மிடம் இருந்த சேமிப்பு பணம், நகைகள் என்பவற்றை இழந்துள்ளதுடன், ஊரில் வட்டிக்கு பெரும் தொகை பணத்தினையும் வாங்கியுள்ளனர்.

இது தொடர்பில் நேற்றைய தினம் திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த மோசடி கும்பல் பல்வேறு வங்கி கணக்குகள் ஊடாகவே பணத்தினை ஏமாற்றி பெற்றுள்ளனர் எனவும், அது தொடர்பிலான விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Source



( மினுவாங்கொடை நிருபர் )

   2020 புத்தாண்டு உதயத்தில் அரச பணிகளை ஆரம்பிப்பதற்காக ஜனவரி மாதம் முதலாம் திகதி விசேட வேலைத்திட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும், மாகாண பிரதம செயலாளர்களுக்கும், அரச நிறுவன பிரதானிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

   இதற்கு அமைவாக, தேசியக் கொடியை ஏற்றி தேசிய கீதத்தை இசைக்குமாறும், படை வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூறுவதற்காக இரண்டு நிமிட நேரம் மௌனம் செலுத்துமாறும் அந்த  ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   இதேபோன்று, அரச நிறுவனங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் தமக்குஆள வசதியான மொழியில் அரச சேவை உறுதி மொழியை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   2020 ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அரச பணியை ஆரம்பிப்பது தொடர்பான பிரதான  வைபவம், ஜனவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி செயலக வளவில் நடைபெறவுள்ளது.

   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் "நாட்டை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு" என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக பணியாற்றும் நாடு ஒன்றை ஏற்படுத்துவதற்கான அரச சேவைச் சிந்தனையின் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதினால், இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, அரச நிர்வாகம் உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

இலங்கை உயர் தொழிநுட்ப கல்லூரிகளுக்கு வருடாந்தம் இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் முப்பதாயிரம் வரை அதிகரிக்க எண்ணியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் யாழ்.உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால இலங்கை முழுவதுமுள்ள 19 மேற்பட்ட தொழினுட்ப கல்லூரிகளுக்கு இதுவரை பத்தாயிரம் வரையான மாணவர்களே உள்வாங்கப்படுகின்றனர். இதனை முப்பதாயிரம் வரை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கான நிதி ஒதிக்கீட்டை செய்வதற்கும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து இந்த நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் கற்கை நெறிகளை நம்பிக்கையுடம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் எதிர்காலத்தில் உயர் தொழினுட்ப கல்லூரிகளுகளுடாக வழங்கப்படும் கற்கை நெறிகளில் பலவற்றை தெரிவு செய்து அவற்றிற்கு பட்டம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக எதிர்வரும் மூன்று வருடங்களில் ஒரு மூலோபாய மேம்பாட்டு திட்டத்தை செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த கண்காணிப்பு விஜயத்தில் அமைச்சர் வவுனியா மற்றும் அனுராதபுரம் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களையும் பார்வையிட்டார்.

இதன்போது அந்த நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.

Source

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், குடி வரவு மற்றும் குடியகழ்வு பத்திரம், பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து தனிநபர் தகவல்களையும் ஒரு தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம் நேரம், உழைப்பு மற்றும் பணம் வீண்விரயமாவதை தடுக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தரவுகள் மற்றும் தொடர்பாடல் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளை ஜனாதிபதி இன்று (30) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

இதன் போதே ஜனாதிபதி மேற்குறித்த அனைத்து தனிநபர் தகவல்களையும் ஒரு தரவு மையத்தின் கீழ் சேகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளார்.

தற்போது பல தகவல் மையங்களின் கீழ் அனைத்து தரவுகளும் சேகரிக்கப்படுகின்றன.

எனவே மேற்குறிப்பிட்ட அனைத்து தரவுகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து அதனூடாக பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

இதன் மூலம் தவறான மற்றும் மோசடியான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சியில் அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் அரை அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் மிக முக்கியமானதாகும்.

எனவே அனைத்து நிறுவனங்களையும் ஒரு வலைப்பின்னலுக்குள் கொண்டு வருவதன் மூலம் பாரிய அனுகூலங்கள் ஏற்படும்.

அதேபோல் நடைமுறையில் உள்ள தகவல் தொழிநுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் அனுகூலங்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

அதேபோல் பாடசாலைகளில் காணப்படும் கணனி ஆய்வக திட்டத்தை கல்வி அமைச்சிடம் ஒப்படைப்பதன் முக்கியதுவம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

AdaDerana.lk 

பாட புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ´ஹதே அபே பொத´ என்ற சர்ச்சைக்குரிய பாலியல் கல்வி தொடர்பான விடயத்தை ஆராய்ந்து பதில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சுடனும், சுகாதார அமைச்சுடனும் கலந்துரையாடி எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே டொக்டர் அனில் ஜசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன தலையிட்டு 7 ஆம் தர மாணவர்களுக்கு விநியோகித்த பாட புத்தகங்களில் பிள்ளைகளின் மனதை துஷ்பிரயோகப்படுத்தும் வகையிலான பாடங்கள் அமைந்துள்ளதாகவும் அதனை உடனடியாக அகற்றுமாறும் கடந்த 24 ஆம் திகதி ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி மெதகொட அபேயதிஸ்ச தேரர் கோரியிருந்தார்.

முன்னாள் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் அக்கில விராஜ் காரியவசம் ஆகியோரின் தலையீட்டால் இந்த புத்தகம் அச்சிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே 7 ஆம் தரத்தில் கற்கும் மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான விடயங்களை கற்றுக்கொடுப்பது பொறுத்தமற்றது எனவும் அது பிள்ளைகளின் நல்லெண்ணத்தை பாதிக்கும் செயற்பாடு எனவும் தேரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

AdaDerana.lk

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரகாபொல, தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விமானப் படை உறுப்பினர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு முச்சக்கர வண்டி ஒன்றும் கன்டேனர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கன்டேனர் ரக வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அததெரண 

தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்ப்பில் போட்டியிட தயாராகவுள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலில் களமிறங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் அதனால் தேர்தலில் களமிறங்கி ஜனாதிபதிக்கு மேலும் இளைஞர்கள் சக்தியை ஒன்றிணைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலி போட்டியிடுமாறு தான் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் நமது நாட்டின் விளையாட்டுத்துறையை மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

AdaDerana

நாட்டைக் காட்டிகொடுக்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் வந்ததில்லையெனத்  தெரிவித்த  முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சிங்கள பௌத்தர்களுக்கு தான் ஒருபோதும் துரோகம் செய்யவில்லை’ என்றார்.
அநுராதபுரத்தில் நேற்று  (29)நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துரைத்த அவர், தான் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இலங்கை மீது, சர்வதேச அழுத்தங்கள் பெருமளவில்  காணப்பட்டன. அந்தத் தருணங்களில்  தான் எதிர்ப்பை  வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
இவ்வாறிருக்க, 69இலட்சம் பேர், பொருள்களின்  விலை குறையும் என்ற நம்பிக்கையில் புதிய ஆட்சியை உருவாக்கியயுள்ளனர் எனத் தெரிவித்த அவர், அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு 4 வருடங்கள் கடந்த பின்னர்,  முன்னைய அராசாங்கத்தை விட  குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க முடிந்தது என்றார்.
அவ்வாறானதொரு அரசியல் வ​ரலாறு இதற்கு முன்னர்  இலங்கையில் ஒருபோதும் இருந்ததில்லை எனத் தெரிவித்த அவர்,  இன்று ஜனாதிபதித்  தேர்தல் முடிந்த உடன்  அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் பெருமளவில் அதிகரித்துவிட்டன என்றார்.

வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று(30) பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
முன்னதாக, வட மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த 18 மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தின்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வட மாகாண ஆளுநராக பதவி ஏற்கவுள்ளதாக கூறப்பட்டது.
எனினும், எதிர்வரும் 02ஆம் திகதி இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தலேயே இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என, தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன, கடந்த 23ஆம் திகதி  காலை கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே, வட மாகாண ஆளுநராக, திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.


இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய மக்கள், இப்போது வித்தியாசமான ஒரு போராட்ட அணுகுமுறையை கையில் எடுத்துள்ளனர்.
போராட்ட விவகாரங்களில் விதவிதமான யுத்திகளை யோசித்து கையாளக்கூடியவர்கள் தமிழர்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது உலகமே இதைப் பார்த்து வியந்தது.




Men opposing citizenship Amendment Act and nrc, using Rangoli


இப்போது, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் கையில் எடுத்துள்ள ஒரு வித்தியாசமான போராட்ட வடிவம் கோலம் இடுதல்.
கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள் என்று எழுதுவதைப் போல, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம், தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றெல்லாம் எழுதி தேசிய அளவில் உள்ள ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர், போராட்டக்காரர்கள். எனவேதான், காவல்துறையினர் இதுபோன்ற கோலங்களுக்கு தடை விதித்து தடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

(One India)



விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் பிணையாளர்கள் இருவரின் வசிப்பிடத்தை உறுதி செய்யும் கிராம அதிகாரியின் சான்றிதலையும் சந்தேக நபரின் நிரந்தர இருப்பிடத்தை உறுதி செய்யும் கிராம அதிகாரியின் சான்றிதலையும் முன்வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரின் வசிக்கும் நிரந்தர முகவரியை நீதிமன்றத்திற்கு அறிவிக்காது மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

(செய்திப்பின்னணி)

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 16 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை மற்றும் பொய் சாட்சியங்களை முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் கடந்த நாட்களில் நீண்ட வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியின் மன நலம் தொடர்பில் பரிசோதித்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய அவர் அங்கொடையில் உள்ள மனநல நிருவகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டார்.

அதன்பின்னர் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதற்படி சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

அததெரண 



ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் அவர்களிடம் CID மூன்று மணி நேரம் விசாரணை நடாத்தியுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.20 வரை விசாரணை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



( மினுவாங்கொடை நிருபர் )

   ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, ஜனவரி மாதம் முதல் இணையத்தளம் மூலம் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

   ஐந்தாம் தர  புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சகல மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி இணையவழி மூலமாகக் கணக்குப் புத்தகத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள  கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

   சகல பாடசாலைகளுக்கும் சென்று உதவித் தொகையைப் பெற்றுக் கொள்ளத் தகுதியுடைய சகல மாணவர்களின் தரவுகளைப் பெற்று, அதற்கமைவாக அட்டவணைகள்  தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

   ஒவ்வொரு வருடமும் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றுவார்கள்.  இதில் மாதாந்தம் 15 ஆயிரம் ரூபாவுக்கு  வருமானம் குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.

   இந்நிலையில், ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிச் சித்தியடைந்த மாணவர்களுக்கு 6 ஆம் ஆண்டு முதல் 13 ஆம் ஆண்டு வரை, இவ்வுதவித் தொகைகள்  வழங்கப்படும். 

   குறித்த உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்ள ஒவ்வொரு மாணவர்களும் மாதாந்தம் வவுச்சர் மூலம் விண்ணப்பிக்கும் முறையே  இதுவரை காலமும் இருந்து வந்தது. இதனால் கால தாமதம், சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. 

   இதனைத் தவிர்க்க, தற்போது இணையவழி மூலமாக மாணவர்களின் கணக்கில் நேரடியாக மாற்றக் கூடிய வகையில் இலகு முறையில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

   இதன்பிரகாரம், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து சகல அரச பாடசாலைகளுக்கும் இணைய வழி மூலமாக உதவித் தொகைகள்  வழங்கப்படும் என நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

தனியார் பஸ் பயணங்களின் போது அதிக சப்தத்துடன் தொந்தரவு தரும் வகையில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டால் 1955 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு முறையிடுமாறு போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.



முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது.

ரூபா 5 இலட்சம் பெறுமதியான இரு சரீர பிணைகளுடன் ராஜித சேனாரத்னவை விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.



விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று (30) மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 16 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை மற்றும் பொய் சாட்சியங்களை முன்வைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் கடத்தப்பட்டமை தொடர்பில் குற்ற் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் கடந்த நாட்களில் நீண்ட வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியின் மன நலம் தொடர்பில் பரிசோதித்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய அவர் அங்கொடையில் உள்ள மனநல நிருவகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டார்.

அதன்பின்னர் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதற்படி சுவிஸ் தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்த போது கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

அததெரண 

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் Undergraduate Society of Gampaha District Moors (USGDM) இன் ஏற்பாட்டில் 2019/2020 கல்வியாண்டுக்காக கம்பஹா மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கான வரவேற்பும் பட்டதாரிகளுக்கான மாநாடும் (2019) நிட்டம்புவ, ஹொரகொல்லவில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகர்த்த கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கபூர் அவர்கள் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நபீஸ், கலாநிதி ரவூப் ஸைன், மௌலவி அம்ஹர் ஹகம்தீன் ஆகியோர் ஏனைய அதிதிகளாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.






A/L பெறுபேறு வெளிவந்திருக்கின்றது, அடுத்து என்ன?
What's Next?
Career Guidance Camp 2019


ஜனவரி 12, 2020
காலை 8.30 மணி முதல்

The Young Friends அமைப்பு, கண்டி மாவட்டத்தில் சமூகப் பணியாற்றி வருகின்ற 50க்கும் மேற்பட்ட சமூகநல நிறுவனங்களுடன் இணைந்து கடந்த பல வருடங்களாக, கண்டி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதி பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான இலவச முழுநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றை வெற்றிரமாக நடாத்தி வருகின்றது.

கடந்த 8 வருடகாலமாக கண்டி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற துறைசார் நிபுணர்களை ஒன்றிணைந்து, இம்மாணவர்களுக்கான வழிகாட்டல்கள் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்படுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களின் ஒன்றாகும்.

Serendib Educational Foundation (SEF) அனுசரணையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஒவ்வொரு வருடமும், 50ற்கும் மேற்பட்ட முக்கிய வளவாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில்…

01. பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பது எவ்வாறு? பல்கலைக்கழக காலப் பகுதியை வெற்றிகரமாக அமைத்துக் கொள்வது எவ்வாறு?

02. பல்கலைக்கழக நுழைவு கிடைக்காதவர்களுக்கு அரச, தனியார் துறைகளில் கல்வியைத் தொடர்வதற்கு எவ்வாறான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன?

03. உயர்தரம் எழுதியவர்களுக்கு எவ்வாறான தொழில் வாய்புக்கள் இருக்கின்றன?

மற்றும்

04. Motivational Programme and Career Test

போன்ற பல பகுதிகளில் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமான மாணவர்களும், பெற்றோர்களும் மேலதிக விபரங்களுக்காக பின்வரும் link ஊடாக இந்நிகழ்ச்சிக்கான பிரத்தியேக WhatsApp குழுவில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

https://chat.whatsapp.com/Has0cWci1EjAxW8quSCelL

https://chat.whatsapp.com/C64yFuCy1YXH8z9ZtNaMJL

https://chat.whatsapp.com/DEsksEgV68JAcNyp5VopBX

த யங் பிரண்ட்ஸ் - கண்டி

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலையானது பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அருகில் (29) நடுநிசி 2.00 மணியளவில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து பள்ளிவாசல் நிர்வாகம்  பொலிஸில் முறைப்பாடு செய்த போது, தம்மால் ஏதும் செய்ய முடியாது எனவும் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் கூறியுள்ளனர். 

மிகவும் குறைந்தளவு முஸ்லிம்கள் வசிக்கும் இப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கருதுகின்றனர்.

இது குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள், ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.




( மினுவாங்கொடை நிருபர் )

   டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான உத்தேச திட்டம் ஒன்றாக வொல் பெக்கியா (Wol bachia) என்ற பக்ரீரியாவை டெங்கு நுளம்பில் உட்புகுத்தும் புதிய வேலைத்திட்டம், ஜனவரி மாதம்  ஆரம்ப காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

   இரண்டு சுகாதார வைத்திய பிரிவுகளைத் தெரிவு செய்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நுகேகொட சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவிலும், கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட தெமட்டகொடை  பிரதேசத்தில் உள்ள "டி1" என்ற பிரிவிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

   அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜனவரி மாதம் முதல் இது முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் மொனெஷ் (Monash University) பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கு அமைவாக இந்த நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் உலகில் 12 நாடுகளில் முன்னெடுக்கப்படுகிறது.

   இது 2023 ஆம் ஆண்டளவில் உலகில் 100 மில்லியன் மக்களை இலக்காகக் கொண்டு விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் பொழுது நுளம்பு முட்டைகள் நாட்டில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பக்ரீரியாவை உட்செலுத்திய பின்னர் மீண்டும் அந்த முட்டைகள் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு நுளம்புகள் உள்ள சுற்றாடல் பகுதியில் விடுவிக்கப்படும்.

அவுஸ்ரேலியாவில் உள்ள தொழில்நுட்பம் இலங்கையில் இல்லாமையால், இந்த முட்டைகள் அந்நாட்டுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. பக்ரீரியா உட்புகுத்தப்பட்ட நுளம்புகள் 12 தொடக்கம் 20 வார காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும். 

   சில காலம் செல்லும் பொழுது வொல் பெக்கியா (Wol bachia) என்ற பக்ரீரியா உட்புகுத்தப்பட்ட நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் டெங்கு நோயைப் பரப்பக்கூடிய நுளம்புகள் சுற்றாடலில் இல்லாமல் போகும். அவுஸ்ரேலியா, வியட்னாம், பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

( ஐ. ஏ. காதிர் கான் )



பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வைத்தியசாலையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் (27) ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக ராஜித்த சேனாரத்ன கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அததெரண)
Blogger இயக்குவது.