அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆம் உறுப்புரைக்கமையவே இவ்வாறு கொண்டாப்படுவதாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பின் முதலாவது அத்தியாயத்தின் 8 ஆவது உறுப்புரையில் தேசிய தினம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டு அரசமைப்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவால் தேசிய தினம் அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1972 ஆம் ஆண்டு அரசமைப்பிலோ வேறு எந்த அரசமைப்பிலோ சுதந்திர தினம் என்று தேசிய தினம் குறித்து விபரித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ உள்ளிட்ட பலர் ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டனர். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.