பெப்ரவரி மாதம் முதல் அனைவருக்கும் இ - ஹெல்த் கார்ட்



( மினுவாங்கொடை நிருபர் )

   நாட்டில் சுமார் இரண்டு கோடி மக்களுக்கு இ - ஹெல்த் கார்டுக்களை வழங்கும் நடவடிக்கைகள்,   பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக,  சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 
   மேல் மாகாணத்தில் முதற்கட்டமாக, களுத்துறை பெரியாஸ்பத்திரி மற்றும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றில்,  இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஏழு மாதங்களில் சகல மக்களுக்கும் இ - ஹெல்த் கார்டுக்களை வழங்குவது இலக்காகும் என்றும்,  சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
   இ - ஹெல்த் கார்டுக்களில்,  நோயாளர்களின் முழுமையான மருத்துவ அறிக்கை உள்ளடக்கப்பட்டிருக்கும். அதன்படி, நோயாளர்களுக்கு நாட்டின் எந்தப் பிரதேச வைத்தியர்களிடமும் விரைவாகச் சென்று  சிகிச்சைகளைப்  பெற்றுக்கொள்ள முடியும். நவீன தொழில் நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஊடாக,  பொதுமக்களுக்கு விரைவான  சேவைகளை  வழங்குவதே,  தமது நோக்கம் என்றும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரட்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.