போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு கண்டிப்பாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ´போதையில் இருந்து விடுபட்ட நாடு´ என்ற தொனிப்பொருளை வெற்றி காண்பதற்காக உயிரை பணயமாக வைத்து சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிக்காட்டிய பொலிஸ் அதிகாரிகளை பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ´ஜனபதி பிரஷன்சா´ (ஜனாதிபதி பாராட்டு) விருது வழங்கல் இன்று (28) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது. 

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.