அனைத்து வீடுகளிலும், வியாபார நிலையங்களிலும், அரசாங்க மற்றும் தனியார் அலுவலகங்களிலும், வாகனங்களிலும் தேசிய கொடியினை காட்சிப்படுத்தி சுதந்திர தினத்தினை
கொண்டாடுவதற்காக ஒன்றிணையுமாறு அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களிடத்தில் வேண்டுகோள் விடுக்கின்றது.

71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் பெப்ரவரி மாதம் 4ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் யாவும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.