மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறுக் கோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவித்து, அனைவரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 

குருநாகல் மாவட்டத்தின் கல்கமுவ தேர்தல் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அத்துடன் சட்ட ரீதியாகவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.