தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் அதன் கௌரவத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்படவுள்ளது. 

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவெல இது குறித்த தெரிவிக்கையில், இது தொடர்பில் தற்போது காணப்படும் சட்டதிட்டங்கள் போதுமானதாகவில்லை என அவர் குறிப்பிட்டார். 

அது தொடர்பான குற்றங்கள் தொடர்பான தண்டனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். தொல்பொருள் பெறுமதி கொண்ட இடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் அதனை பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.