கெளரவ முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் உயர்நீதிமன்ற சட்டத்தடணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் வேண்டுகோளின் பேரில் "ළගම පාසල හොදම පාසල" ජාතික වැඩසටහන 2016 - 2020 திட்டத்தின் கீழ் பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டிடம் கடந்த வெள்ளிக்கிழமை (11/01/2019) அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், சிறப்பு அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷாஹ்  அவர்களும் மற்றும் ஐ.தே.க இன் பொல்கஹவெல  தொகுதி இணையமைப்பாளர்களான அஜித் ரோஹண மற்றும் எச்.எம்.ஜயரத்ன அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை சமூகம், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






(ஷாம் மௌலானா)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.