ஒரு பிரதேச செயலகத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் சம்பந்தமான கடமைகளை மேற்கொள்வதற்கு ஐந்து அதிகாரிகள் இருக்கிறார்கள்.

பிரதேசத்தில் இருக்கும் பாடசாலைகள்,சிறுவர் பராமாரிப்பு நிலையங்கள்,பாலர் பாடசாலைகள்,மகளிர்  சங்கங்கள்
என்று மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் சம்பந்தப்படும் எல்லா இடங்களிலும் இந்த அதிகாரிகளின் சேவைகள் வழங்கப்படும்.

இலங்கையைப் பொறுத்தவரையில்
வட கிழக்கை தவிர்த்து நோக்கினால் ஏனைய மாகணங்கள் அனைத்திலும் இந்தப் பதவிகளில்
சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்ட
அதிகாரிகளே கடமையில் அமர்த்ப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களினால்  வழங்கப்பட வேண்டிய சேவைகள்
தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கோ, தமிழ் பேசும் சமூகத்துக்கோ முழுமையாக சென்றடைவதில்லை.

இந்த அதிகாரிகளுக்கும்
தமிழ் பேசும் சமூகத்துக்கும்
இருக்கும் மொழிரீதியான தடை காரணமாக,
ஒரு அரச அதிகாரியினால் சகல மக்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டிய சேவைகள் சிங்கள சமூகத்துக்கு மட்டுமே சென்றடைகின்றன.

இதனால் அரசு வழங்கும் அதிகமான சேவைகள்
உதவிகள் தமிழ் சமூகத்தை சென்றடைவதில்லை.

குறைந்த பட்சம் மக்களோடு,  மாணவர்களோடு நேரடியாக சம்பந்தப்படும் அரச பதவிகளுக்கேனும்
தமிழ் மொழியில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் குறித்து தமிழ் பேசும் அரசியல் வாதிகள், அரச அதிகாரிகள் கூடுதல் கவனம்
செலுத்தி அரச வழங்கள் மற்றும் சேவைகள்
அனைத்தும் தமிழ் பேசும் சமூகத்துக்கும் முழுமையாக சென்றடையச் செய்ய வேண்டும்.

(Safwan Basheer)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.