என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் வெளிநாடுகளில் பணி புரியும் ஊழியர்களுக்கும் விசேட கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கான யோசனை ஒன்றை அண்மையில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார். முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சிறிய வகை மோட்டார் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான உயர்ந்தபட்ச கடன் தொகையாக 20 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நிதி முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.