-றிம்சி ஜலீல்-

கடந்த 2013, ஜுன், 06 ம் திகதி அதிபராக நியமனம் பெற்று கெகுணகொல்ல தேசிய படசாலையில் பணிபுறிந்த பாடசாலையின்  அதிபர் MTM முதம்மிர் இன்று (22) படசாலை வாழ்கையிலிருந்து நிரந்தரமாக ஓய்வு பெற்றார்.

வடமேல் மாகாணம், குருநாகல் மாவட்டம், குளியாபிடிய தேர்தல் தொகுதியில் நாடு முழுவதும் தொட்டு சர்வதேசம் வரை பேசப்படும் ஒரு பாடசாலைதான் கெகுணகொல்ல தேசிய பாடசாலை இந்த பாடசாலையின் அதிபராக தனது இறுதி காலத்தை செலவிட பாடசாலையின் பழைய மாணவரும் அதிபருமான MTM முதம்மிர் அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்து.

 தான் படித்த பாடசாலையை சர்வதேச தரம் வாய்ந்த ஒரு படசாலையாக மாற்ற வேண்டும் என்கின்ற கனவு அவரிடம் இருந்ததால் படசாலைக்கு வரும் முன்னர் இருந்த தோற்றத்தை மாற்றியமைத்து கல்வி கலை கலாசாரம் என்கின்ற ஒரு சிறந்த பாடசாலையாக கெகுணகொல்ல தேசிய பாடசாலையை மாற்றியமைத்தார்.

கெகுணகொல்ல தேசிய பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கம் என்ற ஒன்று இல்லாத குறைய நிவர்த்தி செய்து பழைய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இவர் விளங்குகின்றார்.






றிம்சி ஜலீல்
+94756682323
+94777259707

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.