மக்கள் மீது தனக்குள்ள செல்வாக்கு ,கீர்த்தி என்பவற்றைஅபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் ஆதாரமின்றிஇட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் பிரசாரம்செய்த,தொழில்சார் தகவல் தொழில்நுட்ப அமைப்பின்செயலாளர் லசந்த விக்கிரம சிங்கவிடமிருந்து ரூபா நூறுமில்லியனை மான நஷ்ட ஈடாக வழங்குமாறு தனதுசட்டத்தரணியூடாக அமைச்சர் ரிஷாத்பதியுதீன் கோரியுள்ளார்.
வியட்நாமிலிருந்து மிளகை இறக்குமதி செய்து,வேறுவகையில் பொதியிட்டு அவற்றை இந்தியா உட்பட வேறுநாடுகளுக்கு .ஏற்றுமதி செய்து உள்ளுர்உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில் அமைச்சரும், அவரது சகோதரரும் நடந்து கொள்வதாகலசந்தவிக்கிரமசிங்க வெளியிட்ட அபாண்டப் பிரச்சாரத்துக்குஎதிராகவே,அமைச்சர் ரிஷாத்பதியுதீன்,இத்தொகையை மானநஷ்டஈடாகக் கோரியுள்ளார்.அவரது சட்டத்தரணி சந்தீபகமதிகே ஊடாக அமைச்சர் அனுப்பியுள்ள மான நஷ்டஈட்டுக்கோரிக்கை  கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மக்களின் பிரதிநிதியான அமைச்சர் ரிஷாதையும்,அவரதுகட்சியையும் பாதிக்கும் வகையில் பொறுப்பின்றிச்செயற்பட்ட,லசந்த விக்கிரமசிங்கவின் நடத்தையால்அமைச்சரின் மவுசும் கௌரவமும்பாழ்படுத்தப்பட்டுள்ளதாகவே அமைச்சர் கருதுகிறார்.அரசின்முக்கியமான அமைச்சர் பற்றி எவ்வித ஆதாரங்களுமின்றிசெய்தி வெளியிட்டுள்ள இவரின் பொறுப்பற்ற நடத்தை.எந்தநோக்கை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் சந்தேகம்ஏற்பட்டுள்ளது.அமைச்சருக்கும் தனது சகோதரருக்கும்இவ்விடயங்களில் எவ்வித தொடர்புகளும் இல்லை.எனவே 14நாட்களுக்குள் அமைச்சர் கோரிய நஷ்ட ஈட்டுத் தொகைவழங்கப்பட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கைக்கு.அமைச்சர் ரிஷாத்பதியுதீன் தயாராகஉள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

  1. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக் கூறும் அமைச்சர் றிசாட், அப்படி மிளகுக் கடத்தல் எதுவும் நடைபெற இல்லையெனக் கூறியதாகத் தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு

Blogger இயக்குவது.