400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் பேலியகொட பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இன்று அதிகாலை வேன் ஒன்றில் இவை எடுத்துச் செல்லப்படும் போது திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

அவற்றின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.