எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உணவுப் பொதியிடலுக்கான 18 ஆவது பதிப்பின் கண்காட்சித் தொடரின் அங்குரார்பண வைபவம்  மற்றும்  அதன் முந்தைய 17 ஆவது பதிப்பின் எக்ஸ்போ விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  (26) கலந்து கொண்டார்.

கொழும்பு சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை உணவு பதப்படுத்தும் சங்கத்தின் தலைவர் சரத் அலஹகோன்செயலாளர்  துசித் விஜேசிங்க, லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவையின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஆசிம் முக்தார் மற்றும் இந்த துறையில் முக்கிய தொழில் பிரமுகர்கள்கலந்துக்கொணடனர்.










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.