பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காக வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் பாராளுமன்ற மின் தூக்கியில் சிக்கியுள்ளனர். 


இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். 

விமல் வீரவன்ச இது தொடர்பில் சபாநாயகரின் அவதானத்திற்கு கொண்டி வந்திருந்தார். 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி, பந்துல குணவர்தன, சீ.பி. ரத்னாயக்க உள்ளிட்டவர்களும் மின் தூக்கியில் சிக்கியுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.