தர்கா நகரில் பௌத்த பிக்கு ஒரு­வ­ரையும் அவ­ரது சார­தி­யையும் அளுத்­க­மையில் வைத்து தாக்கி காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­ய­தாக மூன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த வழக்கில் மூவ­ரையும் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்து விடு­வித்­த­துடன் அவர்கள் குற்­ற­வா­ளிகள் அல்ல  என்றும் களுத்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி சந்­திமா எதி­ரி­மான நேற்று தீர்ப்பு வழங்­கினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி குருந்­து­வத்தை ஸ்ரீ விஜே­ராம விகா­ரையின் பிர­தம குரு அய­கம சமித்த தேர­ரையும் அவ­ரது சார­தி­யான விஸ்­வா­வையும் தாக்கி காயங்­க­ளுக்­குள்­ளாக்­கி­ய­தாக மௌலவி அஸ்கர் மற்றும் அவ­ரது சகோ­த­ரர்­க­ளான அர்சாத், அப்லால் ஆகியோர் மீது இந்த வழக்கு  களுத்­துறை நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

குற்றம் சுமத்­தப்­பட்ட மூன்று முஸ்­லிம்­களின் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான மொஹமட் இஸ்ஹார், எம்.ஐ.எம்.நளீம், எம்.அஸ்லம் ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். சமித்த தேரரின் சார்பில் சட்­டத்­த­ரணி பெவின் குமா­ர­சிறி ஆஜ­ரா­கி­யி­ருந்தார்.

வழக்­குடன் தொடர்­பான சாட்­சி­யங்கள் நம்­ப­க­ர­மாக இன்­மையால் மூவ­ரையும் குற்­றச்­சாட்­டு­க­ளி­லி­ருந்தும் விடு­விப்­ப­தாக களுத்­துறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் தெரி­வித்தார்.

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அளுத்­க­மையில் ஒரு ஒழுங்­கையில் மூன்று முஸ்­லிம்­க­ளுக்கும், அய­கம சமித்த தேரரின் சார­திக்கும் இடையில் ஏற்­பட்ட வாக்­கு­வா­த­மொன்றே ஒரு தாக்­கு­த­லாக சித்­தி­ரிக்­கப்­பட்­டது. பௌத்த குரு தாக்­கப்­பட்­ட­தாக தவ­றான செய்­திகள் சமூக வலைத்­த­ளங்கள் மூலம் பரப்­பப்­பட்­டன.

பொது­பல சேனா அமைப்பு மற்றும் சிங்­கள ராவய அமைப்பும் இந்தச் சம்­ப­வத்தை பெரி­து­ப­டுத்தி துண்டுப் பிர­சு­ரங்கள் வெளி­யிட்­ட­துடன் பொதுக் கூட்­டத்­தையும் பேர­ணி­யையும் ஏற்­பாடு செய்து வன்­மு­றை­களைத் தூண்­டின. இந்தச் சம்­ப­வமே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அளுத்­க­மை­யிலும், பேரு­வ­ளை­யிலும் வன்­செ­யல்கள் உரு­வா­கு­வ­தற்கு கார­ணமாய் அமைந்­தன.

அளுத்­கமை, பேரு­வளை வன்­செ­யல்­களில் மூவர் உயி­ரி­ழந்­த­துடன் பல கோடி ரூபா பெறு­ம­தி­யான முஸ்­லிம்­களின் சொத்­து­களும் அழி­வுக்­குள்­ளா­கின.

இந்த வழக்கில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர் கருத்து தெரிவிக்கையில் 'நடந்திராத ஒரு சம்பவம் நடந்ததாக பதிவானால் அது முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பாக அமையும். தேரரும், சாரதியும் தாக்கப்படவில்லை. வாக்குவாதமே இடம்பெற்றது என்பதை எம்மால் நிரூபிக்கக் கூடியதாக இருந்தது' என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.