எதிர்வரும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபரை அழைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்டங்கள் தொடர்பாக அறிவுரையொன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின்போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து தொடர்ந்தும் இழுபறிநிலை காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.