கொட்டாஞ்சேனை பிரதேசத்தில், நேற்று (14) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், டுபாயில் கைதாகியுள்ள கஞ்சிபான இம்ரானின் சட்டபூர்வமற்ற மனைவியென்று, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆஷ் ஃபாரி (39 வயது) என்ற மேற்படி பெண், குடு ஷூட்டி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார் என்றும் இவரும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர் என்றும், விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
(Tamil Mirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.