தேசிய ஊடக மத்திய நிலையம் ஏற்பாடு செய்த NMC நட்புறவு கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் சாம்பியனாக தெரிவானது.


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அரசாங்க தகவல் திணைக்களம், ஊடக அமைச்சுடன் தேசிய ஊடக மத்திய நிலையமும் கலந்து கொண்ட குறித்த சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மோதியது.


போட்டித் தொடர் முழுவதும் தமது திறமையினை வெளிக்காட்டிய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன கிரிக்கட் அணியின் தலைவர் பிரசாத் தொடர் ஆட்ட நாயகன் விருதினை தட்டிக் கொண்டார்.


போட்டித் தொடரின் சிறந்த பந்து வீச்சாளராக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரசங்க தெரிவான அதே வேளை சிறந்த துடுப்பாட்ட வீரராக அரசாங்க தகவல் திணைக்கள அணியின் தலைவர் தனுஸ்க தெரிவானார். 



இப்போட்டித் தொடருக்கு எட்கோ கிரியேடிவ் விளம்பர முகவர் நிலையம் பிரதான அணுசரனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

கிண்ணங்களை தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் தொடங்கொட அவர்களும் பணிப்பாளர் அகலங்க அவர்களும் வழங்கி வைத்தனர்.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.