கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு மீள்திருத்த நடவடிக்கைக்காக, எதிர்வரும் ஏப்ரல் 12ஆம் திகதிவரை பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) வெளியாகின.

இந்நிலையில், மீள்திருத்தத்திற்காக விண்ணப்பிக்க விரும்பும் பாடசாலை மாணவர்கள் தத்தமது பாடசாலை மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பத்திரிகை விளம்பரங்களை பின்பற்ற வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.