04.19 வரவு - செலவு திட்ட வாசிப்பு நிறைவு. நாடாளுமன்றம் நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

04.13 மடு தேவாலயத்தை அபிவிருத்தி செய்ய 200 மில்லியன் ஒதுக்கம்.

04.12 கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக ஒருநாள் சேவைக்கட்டணம் 5,000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை. சாதாரண சேவைக் கட்டணம் 3,000 ரூபாவாகும்

04.10 கெசினோ அனுமதி கட்டணம் 200 மில்லியனிலிருந்து 400 மில்லியன் ரூபாய் வரை அதிகரிப்பு. இலங்கையில் கசினோ விடுதிகளுக்கான நுழைவுக்கட்டணம் 50 டொலர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிங்கப்பூர் போன்ற நாடுகளில் 100 டொலர்களாக உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

04.08 வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கருப்பட்டி, கள்ளு  உற்பத்தியை அதிகரிப்பதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

04.05 சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிப்பு 

04.00 யுத்தகாலத்தில் அழிவடைந்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய 5 பில்லியன் ஒடுக்கீடு

03.55 250 புதிய பஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

03.51 புகையிலைக்கான வரி 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை

03.50 வடக்கில்  10 பொருளாதார மத்திய நிலையங்கள். பல்வேறு வேலைத்திட்டங்களுக்காக வங்கிகளுக்கு 250 மில்லியன் ஒதுக்கீடு

03.49 வணக்கஸ்த்தலங்களில் சூரியசக்தித் திட்டத்தை நிறுவ நடவடிக்கை.  இதற்காக ஒவ்வொரு வணக்கஸ்த்தலங்களுக்கும் 300,000 ரூபா வழங்கப்படும்

03.48 இந்த வருடத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 15,000 செங்கல் மற்றும் மோட்டார் வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஏற்கனவே 4,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 5,500 மில்லியன் ரூபா  வழங்கப்படும்.

03.46 இயற்கை அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்காக 20,000 மில்லியன்

03.45 பிளாஸ்ரிக், பொலித்தீன்  உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்வது அவசியம்.

03.44 முப்படைத் தளபதிகளின் கொடுப்பனவை  5இ000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்பதுடன், அவர்களது வீட்டுத்திட்டக் கொடுப்பனவை 30 வீதத்தால் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், கடற்படை மற்றும் விமானப்படை சீருடைக் கொடுப்பனவை 200 ரூபாவாவிலிருந்து 600 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

03.43 சமுர்த்தி வேலைத்திட்டத்தை மீள கட்டமைக்க நடவடிக்கை. சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.

03.42 இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை வலுப்படுத்த 100 மில்லியன். கிராம சக்தி வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன்.

03.41 அரச பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக 40 பில்லியன் ஒதுக்கீடு 

03.40 ஜூலை முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு

03.39 அதிக வசதிகளையுடைய ரயில் சேவைகளுக்கு அதிக கேள்விகள் நிலவுகின்றன. இதற்காக 4 புதிய ரயில் பாதைகள் அமைக்ககப்படவுள்ளன. மாலபே- கொழும்பு இலகு ரயில் பாதைக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

03.38 நகர்ப்புற ஈரநிலத் திட்டத்துக்காக பராமரிப்புக்காக 10,900 நிதி ஒதுக்கீடு

03.37 அரச பணியாளர்களுக்கு 2,500 ரூபாய் அதிகரிப்பும் ஓய்வூதியர்களின் கொடுப்பனவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வுக் காணவும் நடவடிக்கை. ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு

03.37 போகம்பர சிறைச்சாலை  பொது இடமாக மாற்றப்படுமென்பதுடன், இதன் அபிவிருத்தித் திட்டங்களுக்காக  750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

03.36 ஓட்டோ, சிறிய கார்களின் போக்குவரத்தை அதிகரிக்க கடன் திட்டமுறையொன்று அறிமுகப்படுத்தப்டவுள்ளது. அதற்கமைய தற்போதைய பாவனையிலுள்ள ஓட்டோக்கள் அகற்றப்பட வேண்டியுள்ளது.

03.35 நாடு முழுவதும் குடிநீர் திட்டங்களுக்கு 45,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

03.34 2016 ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கமைய, அரச பணியாளர்களின் சம்பளம் 107 சதவீத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மேலும் சம்பள தொகையை அதிகரிக்க 4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

03.33 ஆசியாவின் நவீன நகரமாக கொழும்பு நகரம் மாற்றமடைவதுடன், இதன் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்திற்காக 8,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். அத்துடன், சுகித புரவெர திட்டத்திற்கு 3இ000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

03.33 கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்த 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03.32 போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல், நகர வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு பழைய கட்டடங்களை புனரமைக்க நடவடிக்கை

03.31 யாழ்ப்பாணம் பழைய நகர சபையை புனரமைப்பு செய்ய 700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. கண்கண்டியை அபிவிருத்தி செய்ய தற்போது 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

03.30 கொழும்பில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் வகையில் 10,600 மில்லியன் ஒதுக்கீடு.

03.29 2019 ஆம் ஆண்டில் 7 முக்கிய திட்டங்களில் கால்வாய் மற்றும் தலைமைத் திட்டங்களை நிறைவு செய்ய ரூ .2,410 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெதுரு ஓயா திட்டம், மானிக்ககங்கை நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் மொறானா திட்டம் ஆகியவை உள்ளிட்டவைகளுக்காக 21,000 குடும்பங்களை நேரடியாக விவசாயம் மேற்கொள்வதில் பயனளிக்கும்.

03.29 அருவக்காடு கழிவு முகாமைத்துவ வேலைத்திட்டத்துக்கு 7000 மில்லியன் ஒதுக்கீடு.

03.28 தேசிய ஒலிம்பிக் நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை

03.27 கொலன்னாவ மற்றும் அலுவிகார விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் 

03.26 தெரிவுசெய்யப்பட்ட இராணுவ முகாம்களில் உள்ளவர்களுக்கு  NVQ தொழிற்பயிற்சி தரச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

03.25 சுகாதார துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 24,750 மில்லியன் ஒதுக்கீடு

03.24 விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்க நடவடிக்கை

03.23 தமிழ் மொழியல் ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்காக ரூ. 400 மில்லியன் அரச கரும மொழிகள் அமைச்சுக்கு வழங்கப்படும்

03.22 3 இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் தோற்றினாலும்  35,000  மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்கின்றனர். ஏனை​யோர் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் படிக்க வாய்ப்பிருந்தும் நிதி வசதி இல்லாமல் கல்வியைத் தொடர  முடியாதவர்களுக்கு ' மை பியுச்சர்' என்ற திட்டத்தின் கீழ்  1.1 மில்லியன் ரூபாய் வட்டியற்ற கடன் வழங்கப்படும் .

03.21 பல்கலைக்கழகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03.20 கம்பெரலிய வேலைத்திட்டத்தை வலுப்படுத்த 48,000 மில்லியன் ஒதுக்கீடு 

03.19 ஆய்வு கூடம் மற்றும் வாசிகசாலை என்பவற்றை விரிவாக்க நடவடிக்கை. இதற்கு 32 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு. பாடசாலை விடுமுறை நாட்களில் ஆசியரியர்களுக்கு பயிற்சி நடத்தப்படும். அதற்க 100 மில்லியன் ஒதுக்கீடு

03.18 ருஹூணு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றை நிறுவ நடவடிக்கை

03.17 நிபந்தனையுடன் வெளிநாட்டில் உயர்கல்வியை தொடர வாய்ப்பு. 10 வருடங்கள் இலங்கையில் தொழில்புரிய கட்டாயம் வேண்டும்.

03.16 இலங்கையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு உலகில் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பு  

03.15 கல்வித் துறைக்கு 32 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03.14 தகவல் தொழிநுட்ப சேவை தொழிற்றுறைக்கு கலைப்பட்டத்தாரிகளை இணைத்துக்கொள்வதற்காக 1300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

03.13 ஐந்து அறைகளைக் கொண்ட ஹோட்டல்களை ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து பதிவு செய்ய நடவடிக்கை. அதற்கான பதிவு நடவடிக்கைகள் இலகு படுத்தப்படும்

03.12 தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர் தேசிய வருமான சட்டத்தில் தேவையான திருத்தத்தை மேற்கொள்ளுதல்

03.11 அம்பேபுஸ்ஸ, வீரவில ஆகிய இடங்களில் இரண்டு விவசாய நிலங்களை சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து அமைப்பதற்கும், சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு கைவினைப் பொருட்களை செய்யும் மத்திய நிலையம் ஒன்று தொம்பே கிராமத்தில் அமைக்கப்படவுள்ளதுடன், இதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

03.10 வடக்கில் முஸ்லிம்களை மீள் குடியமர்த்துவதற்கான வளங்களை அதிகரிக்க நடவடிக்கை

03.09 தனியார் நிறுவனங்களும் பிரசவ விடுமுறையை 3 மாத காலம் வழங்கும் வகையில் வழிவகைகளை செய்தல்.

03.08 250 க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களில் சிறுவர் பாதுகாப்பு மத்திய நிலையத்தை அமைக்கும் தனியார் நிறுவனங்களுக்கு என்டபிரைஸஸ் ஸ்ரீ லங்காவின் கீழ் பாதுகாப்பு நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை

03.07 வெளிநாட்டில் தொழில்புரிவொருக்கு சீனமாளிகா கடன் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

03.06 25 வருடங்களில் செலுத்தக் கூடிய வகையில் 6 சதவீத வட்டி அடிப்படையிலான இலகுக் கடன் திட்டங்களை இளம் ஜோடிகளுக்கு வழங்க நடவடிக்கை

03.05 வடக்கு கிழக்கு ஆகிய பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அத்துடன் அங்குள்ள மக்களுக்காக வீடமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க 24 பில்லியன் ஓதுக்கீடு

03.04 சிறைச்சாலை திணைக்களத்துடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களை அதிலிருந்து மீட்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

03.03 சிறுநீரக நோயாளர்களுக்கு 1800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

03.02 அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை.

03.00 மொரகாகந்த, களுகங்கை திட்டங்களை அடுத்தாண்டு நிறைவு செய்ய எதிர்பார்ப்பு

02.48 நாட்டில் சகல பாடசாலை மாணவர்களுக்கும் ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கப்படும்

02.45 புகையிரத நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டு அவை தனியாருக்கு நிர்வகிக்க கொடுக்கப்படும்.

02.42 100,000 க்கு மேற்பட்டோருக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. மொனராகலையில்  மாத்திரம் 35,000 குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. கடந்த அரசாங்கம் இதனை கவனிக்கவில்லை. இந்த வருடம் சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் 4 பில்லியன் ஒதுக்கீடு.

02.34 மீன் ஏற்றுமதி மூலம் 209 மில்லியன் ரூபாய் இலாபம் வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

02.33 பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைத் தொடர்பில், தேயிலை சபையுடன் கலந்துரையாடி விரைவானத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

02.31 கறுவாப்பட்டையை  ஏற்றுமதி செய்யும் வகையில், அத்தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 75 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை 

02.30 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பயனாளிகளிகளுக்கு என்டபிரைஸஸ் கடன் திட்டத்தை பெற்றுக்​கொடுக்கும் போது முக்கியதுவம் வழங்கப்படும். இதுவரை 60,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

02.29 இறப்பர் உற்பத்திக்கு 800 மில்லியன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தெங்கு உற்பத்தியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கவும் நடவடிக்கை 

02.28 விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்க 250 பில்லியன் ஒதுக்கப்படும். அநுராதபுரம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நடவடிக்கை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவிப்பு.

02.25 சிறிய மற்றும் மத்திய தர வர்த்தகர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

02.21 என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த நடவடிக்கை. இதன் மூலம் கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.