கொழும்பில் நாளை (30) 
24 மணித்தியால நீர் வெட்டு


( மினுவாங்கொடை நிருபர் )

   நாளை 30 ஆம் திகதி கொழும்பின் பல பகுதிகளில் 24 மணித்தியால நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
   மின்சார விநியோகம் துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காகவேண்டி,  இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச்  சபை தெரிவித்துள்ளது.
   கொழும்பு, கோட்டை,  தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, சொய்ஸாபுர,  கடுவல,  மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா  ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
   நாளை 30 ஆம் திகதி காலை 9 மணி முதல் 31 ஆம் திகதி காலை 9 மணி வரையிலும் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச்  சபை ​அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.