தேர்தல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக  சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் ஒய்வுப்பெற்றுச் செல்வதையிட்டு, குறித்த வெற்றிடத்துக்கு, சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் மேலதிக தேர்தல் ஆணையாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  
சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல் ஆணைக்குழுவின் 4 ஆவது பணிப்பாளர் நாயகமாக விளங்குவதுடன், அவர் இன்று (11) தனது கடமைகளை ​பொறுப்பேற்றுக்கொண்டார்.

(Tamilmirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.