கல்வி அமைச்சின் பரீட்சைகள் திணைக்களத்தினால் இவ்வாண்டு நடாத்தப்படவிருக்கும் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 04.08.2019 இல் நடைபெறும்.க.பொ.த உயர்தரப் பரீட்சை 05.08.2019 முதல் 31.08.2019 வரை நடைபெறும். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 02.12.2019 முதல் 12.12.2019 வரை நடைபெறும்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெரும்பாலும் 28ஆம் திகதி வியாழக்கிழமை வெளி வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் 3 முதல் 12 வரை நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 656,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 422,850 பாடசாலை மாணவர்களும் 233,791 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தோற்றியிருந்தனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.