முஸ்லிம் சமூ­கத்தின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, அந்த சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள் ஒற்­று­மைப்­பட வேண்டும். தமது வீடு­க­ளுக்குள் சிக்­கல்­களை வைத்துக் கொண்டு,  பிற சமூ­கங்­க­ளுடன் சமா­தானம் பேச முடி­யாது. முஸ்லிம் கட்சித் தலை­வர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதி­யுத்தீன் மற்றும் அதா­உல்லா ஆகி­யோ­ருடன் ஹிஸ்­புல்லா என அனை­வரும் ஒன்­றி­ணைதல் அவ­சியம். அப்­போ­துதான் சமூகம் எதிர்­பார்க்­கின்ற இலக்­கினை நோக்கி நக­ர­மு­டியும் என ஜாதிக பல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­வித்தார்.

ஜன­நா­யக தொழி­லாளர் சங்­கத்தின் அம்­பாறை மாவட்ட இணைப்­பாளர் எஸ்.ஏ. ஜப்பார் தலை­மையில் பொத்­து­விலில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். இங்கு வட்­ட­ரக்க விஜித தேரர் மேலும் கூறு­கையில்,

சிறு­பான்­மை­யிலும் சிறு­பான்­மை­யாக வாழு­கின்ற முஸ்லிம் மக்கள்இ அர­சியல் மற்றும் மத ரீதி­யாக சிறு சிறு குழுக்­க­ளாக பிரிந்­துள்­ளனர். இதன்  கார­ண­மா­கவே அவர்­களின் தீர்க்க முடி­யாத பிரச்­சி­னைகள் அதி­க­மாகிக் கொண்டு செல்­கின்­றன.

முஸ்லிம் சமூ­கத்தின் தீர்க்­கப்­ப­டாத பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, அந்த சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள் ஒற்­று­மைப்­பட வேண்டும். தமது வீடு­க­ளுக்குள் சிக்­கல்­களை வைத்துக் கொண்டு, பிற சமூ­கங்­க­ளுடன் சமா­தானம் பேச முடி­யாது. ஒவ்­வொரு சமூ­கங்­க­ளுக்­குள்ளும் பிரச்­சி­னைகள் உள்­ளன. அதிலும் சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டு­வ­தற்­கான செயற்­றிட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டுதல் அவ­சியம்.

முஸ்லிம் கட்சித் தலை­வர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதி­யுத்தீன் மற்றும் அதா­உல்லா ஆகி­யோ­ருடன் ஹிஸ்­புல்லா என அனை­வரும் ஒன்­றி­ணைதல் அவ­சியம். அப்­போ­துதான் சமூகம் எதிர்­பார்க்­கின்ற இலக்­கினை நோக்கி நக­ர­மு­டியும். நமது வீடு­க­ளுக்குள் பிரச்­சி­னை­களை, சிக்­கல்­களை வைத்­துக்­கொண்டு பிற சமூ­கத்­துடன் சமா­தானம் பேச முடி­யாது. எனவே தங்­க­ளுக்குள் இருக்­கின்ற சிக்­கல்­களை தீர்க்க முனை­யு­மாறு குறித்த தலை­வர்­க­ளுக்கு கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.

அதேபோல் சிங்­கள மக்­களும் ஒன்­றி­ணை­வது அவ­சியம். முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­களும் ஒன்­றி­ணை­வது மிக முக்­கி­ய­மாகும். நாங்கள் இவ்­வ­ளவு காலமும் – இன நல்­லி­ணக்கம் பற்றி பேசு­கின்றோம். மூவி­னங்­களும் ஒற்­று­மை­யுடன் வாழ வேண்டும் எனவும் பேசு­கின்றோம். ஆனால் அதற்­கு­ரிய எந்த திட்­டங்­களும் இந்­த­நாட்டில் இன்னும் இல்­லா­தி­ருக்­கின்­றது. யுத்தம் முடிந்­துள்­ளது, ஆனால் மக்கள் மத்­தியில் சமா­தா­ன­மான வாழ்வு இல்லை.

இலங்­கையில் நல்­லி­ணக்கம், மத மற்றும் இன பல்­லி­னத்­தன்மை கட்­டி­யெ­ழுப்­புப்­ப­டுதல் அவ­சி­ய­மாகும். அதற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­யினை ஜாதிக பல­சேனா மேற்­கொள்ளும். இதேபோல் வடக்கு மக்­க­ளி­டமும் சென்று அங்கும் இதே மாதி­ரி­யான ஆலோ­ச­னை­களை அங்­குள்ள தமிழ் மக்­க­ளுக்கும் எடுத்­து­ரைக்­க­வி­ருக்­கின்றோம். தமிழ் மக்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் கட்சிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் இன்னும் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. இனங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை தீர்க்காமல் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.