உலகில் மகிழ்ச்சியுடன் மக்கள் வாழும் நாடுகளின் தரப்படுத்தலில், இலங்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கு நிகராக 2019 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த மதிப்பீட்டு அறிக்கையில், 14 இடங்களை பின்தள்ளி,2018 ஆம் ஆண்டில் தக்கவைத்திருந்த 116 ஆவது இடத்திலிருந்து,  இலங்கை 130 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
156 நாடுகளிடேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, உலகில் மகிழ்ச்சியுடன் மக்கள் வாழும் நாடுகளின் தரப்படுத்தலில், 2018 ஆம் ஆண்டைப்போல் இம்முறையும் பின்லாந்தே முதலாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இரண்டாம் மூன்றாம் இடங்கள் வரிசையில் டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகள் உள்ளன. 
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.