அரசாங்க தாதியர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு  சுகயீன விடுமுறை அடையாள வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 7மணி முதல் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஐக்கிய தாதியர் சேவை ஒன்றியத்தின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மஹரகம புற்று நோய் வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலையின் பெண்கள் மற்றும் விசேட பிரிவு ஆகியவற்றில் இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.