பாடகர் அமல் பெரேராவின் மகன் நதிமாலும் சிறைச்சாலை அதிகாரியொருவரும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நதிமால் பெரேரா (24) மற்றும் சிறைச்சாலை அதிகாரி கே. லலித் குமார ஆகியோரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இவ்விருவரும் மாகந்துரே மதுஷுடன், துபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
நாடு கடத்தப்பட்ட இவ்விருவரும், விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தபோதே, கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பிளயி துபாய் குணு 547 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்திருந்தனர்.
உள்ளாச ஹோட்டல் ஒன்றில் வைத்து கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி மாகந்துரே மதுஷ், பாடகர் அமல் பெரேரா, நதிமால் பெரேரா உட்பட 31 பேர் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கருத்துரையிடுக