வில்பத்து விடயத்தினை வைத்து இனவாதத்தினை தூண்டுவோருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய ஜனநாயக கட்சியின் (UDP) தலைவர் நஜாத் நூர்தீன் தெரிவிப்பு.


 எமது நாட்டின் சொத்துக்களில் ஒன்றான  வில்பத்து வனாந்திரத்தினை அழித்து அங்கே முஸ்லிம்கள் குடிபதியாகின்றனர் என்று இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதத்தினை இலத்திரனியல்  ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் பரப்பிக் கொண்டு வருகின்றவர்களுக்கு எதிராக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விடயம் சம்பந்தமாக அவ்விடத்துக்கு நேரில் சென்று உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்த ராஜாங்க அமைச்சர்களான ரஞ்சன் ராமநாயக்க, அஜித் மான்னப்பெரும, மற்றும் பாராளுமன்றத்திலே உரையாற்றிய அமைச்சர் ரிஷாத் பதுறுதீன்,  சுற்றுலா மற்றும்  வனவிலங்குகள் வன  விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதி அமைச்சர் புத்திக பத்திரன ஆகியோருக்கு ஐக்கிய ஜனநாயக கட்சி (UDP) சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் UDP யின் தலைவர் நஜாத் நூர்தீன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

(நாஸர் JP)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.