மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட கஞ்சிப்பான
இம்ரான் , கொழும்பில் சி ஐ டியினரின் தீவிர விசாரணைகளில் பல முக்கிய விடயங்களை கசிய விட்டிருப்பதாக தகவல்..

பல அரசியல்வாதிகள் , நடிகர்கள் , வர்த்தகர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரின் பெயரை வெளியிட்டுள்ள இம்ரான் தனக்கு உரிய பாதுகாப்பு சிறையில் வழங்கப்படுமானால் மேலும் பல தகவல்களை கூறத் தயாரென கூறியிருப்பதாக அறியமுடிகின்றது.
கஞ்சிப்பான இம்ரானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பான அறிக்கை மற்றும் சிக்கியிருக்கும் அரசியல் பிரமுகர்களின் பெயர்களை பாதுகாப்புத்துறை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.

அதேபோல அவரிடம் வெளியாகிய பாதாள உலகக் கோஷ்டியின் விபரங்கள் ஊடாக உடனடியாக கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

17 மணி நேர விசாரணைகளின் போது இடையிடையே கண்ணீர் விட்டழுத இம்ரான், சமூகம் தான் தன்னை குற்றவாளியாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டாரென உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்லவிருந்த இம்ரானுக்கு கொழும்பு விமான நிலையத்தில் டிரான்சிட் ஊடாக தப்பிச் செல்ல உதவியவர்கள் குறித்தும் விசாரணைகள் நடப்பதாக அறியமுடிகின்றது.

நன்றி - மடவளை நியூஸ் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.