ரயில்வே என்ஜின் ஊழியர்கள் சங்கம் இன்று (05) நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த  பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்கப் பெற்றதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக ரயில் சாரதிகள் நியமனம் இடம்பெற்றுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  (DailyCeylon)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.