நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடியும் வரை நாட்டில் வெசக், பொசன் பண்டிகைகளை நடத்த வேண்டாமென்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அத்துடன்  50 விகாரைகளில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக தகவல்களை தேவையெனில் சிறைக்கு வந்து தன்னை சந்திக்குமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 (தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.