மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 21 மீனவர்களும் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.

அந்த மீனவர்கள் நாளை (11) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். யு.எல்லோரும்.104 விமானத்தில் நாளை இரவு 9.00 மணியளவில் அவர்கள் அங்கிருந்து புறப்படவுள்ளனர்.

கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மாலைதீவு முக்கியஸ்தர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை அடுத்து, குறித்த மீனவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க முடிந்ததாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

21 மீனவர்களுக்கும் தேவையான டிக்கட், உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக ரூபா 16 இலட்சம் ரூபா வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மாலைதீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதற்குத் துரித நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சென்ற மாதம் (13) படகு உரிமையாளர்களுடனான சந்திப்பில் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்திப்பில், ஒரு சில வாரங்களிலேயே மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்ததுடன் தற்போது அதனை நிறைவேற்றக் கிடைத்ததையிட்டு பெரிதும் மகிழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்ற பெப்ரவரி 28 இல் அரபிக்கடலில் மீன்பிடித்து விட்டுத் திரும்பும் போது இரு படகுகள், பெருமளவிலான மீன்கள், உபகரணங்களுடன் மீனவர்கள் மற்றும் அரபிக்கடலில் இரு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலரும் மாலைதீவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

✍🏻ரிஹ்மி ஹக்கீம்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை  திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.