டீசல் கட்டணம் அதிகரித்தால் பஸ் கட்டணம் அதிகரிக்கும் வாய்ப்பு

( ஐ. ஏ. காதிர் கான் )

   எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய,  எதிர்வரும் 10 ஆம் திகதி டீசலின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணங்களும்  அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
   எனினும், தற்போதுள்ள குறைந்தபட்சக்  கட்டணமான 12 ரூபாவில் எவ்வித மாற்றமும்  மேற்கொள்ளப்பட மாட்டாது என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
   புதன்கிழமை  (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.