இனரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான பிரசாரங்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை பிழையாக வழிநடத்தும் தகவல்களை வெளியிடுவது போன்றவற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு பொது மக்களிடமும், ஊடகங்களிடமும் பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது.  

பாதுகாப்பு அமைச்சில் ஊடக நிலையத்தின் சார்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இந்தக் கோரிக்கை தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் அல்லது வன்முறைகளைத் தோற்றுவிக்கும் வகையில் அல்லது பொது மக்களிடையே காணப்படும் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் போலியான செய்திகள், படங்கள், நேர்காணல்கள் மற்றும் ஏனைய வெளியீடுகளை பகிர்ந்துகொள்பவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.  

எந்தவொரு நபர் அல்லது அமைப்பு போலியான பிரசாரங்கள், வதந்திகள் மற்றும் தவறுதலான தகவல்களை பரப்புவதற்கு எவ்வகையான ஊடகங்களைப் பயன்படுத்தினாலும் அவர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.