மேல் மாகாணத்தைச் சேர்ந்த HNDE ஆங்கில உயர் டிப்ளோமாவைப் பூர்த்தி செய்தவர்களுக்கான ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் கௌரவ அர்ஷாத் நிஸாம்தீன் அவர்கள் மூலம் கௌரவ ஆளுனர் அஸாத் சாலி அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதனது ஓரங்கமாக ஆளுனருடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்றைய தினம் (08) அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபை உறுப்பினர் அவர்கள் ஒரு அலுவல் காரணமாக வெளியே சென்றுள்ளதால் அவரது வேண்டுகோளில் பிரத்தியேக செயலாளர் ரியாஸ் கபூர் அவர்கள் HNDE பூர்த்தி செய்தவர்களுடன் ஆளுனருடனான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதனையடுத்து மேல் மாகாணத்தில் உள்ள HNDE உயர் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனத்தை விரைவில் வழங்குவதற்கான தீர்மானத்தை ஆளுனர் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.