நாட்டில் தற்போது நிலவிவரும் பிரச்சினைகள் குறித்த விரிவான கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று இன்று இரவு 10.30 மணிக்கு ரூபவாஹினி அலைவரிசையில் இடம்பெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், சட்டத்தரணி ஜாவித் யூசுப் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எம்.எச்.எம். ஹிஷாம் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர். 

'99 Minutes' எனும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து தற்போதைய சூழ்நிலை தொடர்பில் சிங்கள மொழி மூலம் வளவாளர்கள் விரிவாக கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.