ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரின் கிழக்கே மீனா மங்கள் என்ற பெண் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.  அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார்.

இவர் 3 உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களிலும் இதற்கு முன் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார்.  இவரது படுகொலை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் வரை கொல்லப்பட்டு உள்ளனர்.  இவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர் என அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.