மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிமினால் அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று இன்று (18) கையளித்தார்.

சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிம் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.ஜலாதீனிடம் அமைச்சரின் நிந்தவூர் அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

இதன்போது கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீர், மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.ஆர்.லக்ஸ்யன், என்.சாதனா, ஆயுர்வேத சேவை உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(ஊடகப் பிரிவு)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.