சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பகிர்தல், மதங்களை பாதிக்கும் தகவல்களைப் பதிவிடல், இனவாதக் கருத்துக்களை பதிவிடல் போன்ற சட்டத்திற்கு முரணாண செயற்பாடுகளை தவிர்க்குமாறு  மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது கட்டளையிட்டார்.

அரசானது இவ்வறான செயற்பாடுகளை புரிவோரை கண்காணிப்பதற்கு பிரத்தியேக்குழுவை அரசாங்கம் நிறுவியுள்ளதாகவும், குற்றவாளிகள் கடுமையான தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அவை தண்டப்பணமாகவே அல்லது சிறைத்தண்டனையாகவோ அமையாலம் எனவும், சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொள்ளும் தரப்பினர்கள் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்கள் எனின் அவர்களது உரிமம் இரத்துச் செய்யப்படும் என்றும், தனிநபர்கள் எனின் உரிய தண்டனைகள் வழங்கப்படும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.