கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரீட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

அசல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டுள்ளது. 

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்திற்கு பாரிய நிதி மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கே அதிகாரம் இருப்பதாகவும், தனது சேவையாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கை இதனுடன் ஒப்பிட முடியாது என்று கோட்டாபய ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

எனினும் இந்தக் கோரிக்கையை கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் நிராகரித்ததாக தெரிவித்த சட்டத்தரணி, நீதாய மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி மறுத்து உத்தரவிட்டதாகவும் கூறினார். 

ஆகவே உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து உத்தரவிட்ட கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோமானது என்று உத்தரவிடுமாறு கோட்டாபய ராஜபக்ஷ சார்பான சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் மனுவின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 06ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

(அத தெரண) 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.