எமக்கு தெரிந்த கிறிஸ்தவ சகோதரர். உண்மையான மனிதாபிமானி அவர். இயேசுநாதர் மீது அதிக நேசமும் பற்றும் வைத்திருப்பவர்.  நாட்டின் தற்போதைய நடவடிக்கைகளால் முஸ்லிம் சமூகத்தின் மீது தவறாக கட்டமைக்கப்பட்டிருக்கும் போலி குற்றச்சாட்டுக்களுக்களை ஆரம்பம் முதல் நிராகரித்துவருபவர். இப்தார் முடிந்தும் எம்மிடம் வந்தார் அவர்.

"முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில சிலரின் செயற்பாடுகளினால் ஒட்டு மொத்த சமூகத்தையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனைகிறார்கள். இது புனித ரமழான் மாதம். அப்பாவிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நீங்கள் தைரியமாக இறைவனிடம் ஒன்றை மட்டும் தொழுகையில் கேளுங்கள். இறைவா நீ நீதியாளன். அநீதியிழைக்கப்பட்ட எமக்கு நீதியை வழங்குவாயாக. நிச்சயம் உங்களுக்கு  நீதி கிடைக்கும் என்றார்"

மனிதம் வாழட்டும்

(பஸ்ஹான் நவாஸ்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.