கடந்த உயிர்த்த ஞாயிறன்று அப்பாவி பொதுமக்களை இலக்குவைத்து நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதலையும், அதன் பின்னர் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான கெடுபிடிகளையும் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் கண்டனப் பேரணி இன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் நடைபெற்றது.
புத்தளம் நகர சபை, ஜம்மிய்யதுல் உலமா புத்தளம் கிளை மற்றும் புத்தளம் பெரியபள்ளிவாசல் இணைந்து இதை ஏற்பாடு செய்தது.
அண்மையில் அப்பாவி பொதுமக்ககளை இழக்குவைத்து மேற்காெள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தீவிரவாத தாக்குதலை கண்டித்தல், பண்டிகை காலத்தில் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வது, இனவாத கும்பல்களின் தாக்குதல்களிலிருந்து புத்தளம் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களை கலந்துரையாட அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் வேண்டுகோளின் படி புத்தளம் நகர சபை ஏற்பாடு செய்த கூட்டம் நேற்று நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து ISIS மற்றும் அனைத்து தீவிரவாதத்துக்கும் எதிராக மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்ற முன்மொழிவை முன்மொழிந்தார். அதன் பிரகாரமே இம்மாபெரும் கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் அரசியல் பிரமுகர்கள், புத்தளம் ஜம்மிய்யதுல் உலமா சபை தலைவர், பெரியபள்ளிவாசல் தலைவர், அனைத்து பள்ளிவாசல்களினதும் நிர்வாகிகள் உட்பட பெருந்திறலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
-Admin_Qatar-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.