ஏப்ரல் 21 நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டில் அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனால் VPN இற்கான கேள்வி அதிகரித்தது. இணையத்தளப் பாவனையாளர்களில் 95 வீதமானவர்களுக்கு அது பற்றித் தெரியாது. அரசு சமூக வலைத்தளங்களை முடக்கினாலும் 58% ஆனவர்கள் அவற்றை VPN மூலம் பாவித்துள்ளனர்.

VPN இனை செயற்படுத்தத் தெரியாதவர்களை வைத்து சில கடைகள் இலாபம் பார்த்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது. குறித்த கடைகள் VPN இனை செயற்படுத்த 100 ரூபா அறவிட்டனவாம். அத்துடன் சில தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு VPN குறித்து வகுப்பில் பாடம் எடுத்துள்ளதாகவும் அந்த இணையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.