#human_rights_commission

========≠=========≠=========≠========

இலங்கை முஸ்லிம்களுக்காக நாங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏன் வந்ததோ தெரியவில்லை.

உலகில் எல்லாப் பகுதிகளிலும் முஸ்லிம்கள் எண்ணிலடங்கா துன்பங்களையும்,உயிர்களையும்,உறவுகளையும்,உடமைகளையும் இழந்து வருகின்றனர்.

இந்த விடயங்களை கவனிக்காமல் திடீர் என #இலங்கை_முஸ்லிம்கள் தாக்கப் படுவது நாம் தாக்கப் படுவது போல் என்ற கோசம் எழுந்துள்ளது.

இஸ்ரேலின் அடக்கு முறையும், அட்டூலியங்களும் எல்லை மீறி முஸ்லிம்களை சிறுவர்கள் பெரியவர்கள் பாராமல் கணும் இடங்களில் இறக்கமற்ற கல்நெஞ்சம் கொண்டவர்கள் கொத்து கொத்தாக கொலை செய்கின்றனர்.

இதை கண்டிக்காத ஐ.நா.ம.உ.இன்று இலங்கை முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துள்ளது.

இது போலியான தா? அல்லது இப்போதாவது வாய் திறந்தார்களே என்று திருப்தி கொள்வதா? தெரிய வில்லை.

ஐ.நா.மனித உரிமை என்று ஒன்று உண்டு என்பதை உலக மக்களுக்கு நினைவூட்டும் விதமாக ஒரு அறிக்கை!

ஐ.நா.ம.உ.  இலங்கை முஸ்லிகலுக்காக குரல் கொடுத்தது எமக்கு திருப்தியளிக்கிறது.

இருந்தாலும் எல்லாம் முடிந்த பின் அறிக்கை விடுவது தான் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது.

#உலகில்_முஸ்லிம்கள்_மட்டுமல்ல யாருடைய உயிராயினும்,உடமையாயினும்,மதமாயினும் அது மதிக்கப்பட வேண்டுமே தவிர மிதிக்கப்படவோ அல்லது அழிக்கப்படவோ கூடாது என்பது உலக முஸ்லிம்களின் வேண்டுகோளும், அவர்களது மதத்தின் போதனையும் ஆகும்.

இப்படி அநியாயங்கள் நடைபெறும் போதெல்லாம் ஐ.நா.ம.உரிமைகள் அமைப்பு குரல் கொடுக்குமேயானால் நிச்சயமாக அதிகரிக்கும் இன படுகொலைகள் குறைந்து இன,மத, நிற ஒற்றுமை உலகில் மேலோங்கி மக்கள் மனிதநேய மக்களாக வாழ்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

#இலங்கைக்காக_நீங்கள் விட்ட அறிக்கைக்கு #இலங்கை_முஸ்லிம்கள்_சார்பாக_நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களது அறிக்கை அறிக்கையோடு நின்று விடாமல் அது செயலுக்கும் நடைமுறைக்கும் வர வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தையும், நிபந்தனையையும் இட வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம்கள் வேண்டுகோளாக முன்வைக்கிறோம்.

மனிதன் வாழ்வது நிரந்தரம் இல்லாவிட்டாலும் அவன் நிம்மதியாக வாழவே வேண்டும் என ஆசைப் படுகிறான்.

✒முபாரிஸ் றஷீதி.......

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.