அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எந்தவிதமான தீவிரவாத செயற்பாடுகளிலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சபாநாயகர் கரு ஜயசூர்யாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் நேற்று சபாநாயகருக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதக் குழுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் குழு நடத்திய விசாரணைகளில், ரிஷாத் பதியுதீன் தொடர்பில் வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், அவருக்கும் தீவிரவாதத்திற்குத் தொடர்புகள் இருப்பதாக எவரும் சாட்சியங்களை முன்வைக்கவோ, முறைப்பாடுகளைச் செய்யவோ இல்லை என பதில் பொலிஸ் மா அதிபர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
(DAILY CEYLON)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.