வைத்தியர் ஷாபி அவர்களை கைது செய்து தடுத்து வைப்பதற்கான கட்டளையை Detension Order (D.O) நீதிமன்றம் மூலம் பெற்று மூன்று மாத தடுப்புக் காவலில் வைத்து  விசாரனை முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வந்தும் அவர் சிறையில் இருப்பதற்கான காரணம் இந்த D.O. தடுத்து வைப்பதற்கான கட்டளை தான்.

தற்போது வைத்தியர் ஷாபி அவர்களை சிறையில் இருந்து விடுவிப்பதாக இருந்தால் பாதுகாப்புச் செயலாளரின் எழுத்து மூல பரிந்துரையை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் தடுத்து வைப்பதற்காக பெறப்பட்ட கால எல்லை முடிவடைய வேண்டும்.

தடுப்புக் காவலின் காலம் முடிவடைய முன்பு குற்றச்சாட்டுகள் போலியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புச் செயலாளரின் எழுத்து மூல பரிந்துரையை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கும் வரை அவரை விடுதலை செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

விரைவில் சிறையில் இருந்து வெளியேற வல்ல நாயன் அருள் புரிய வேண்டும்.

திக்ருல்லாஹ் ஜிப்ரி,
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்,
குருணாகல்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.