சுமார் முப்பது வருடங்களின் பின்னர் கஹட்டோவிட்டாவில் வாராந்த சந்தை பொல இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கடைசியாக கஹட்டோவிட்ட மர்ஹூம் தாஹிர் நானா வீட்டு முன் இந்த பொல நடைபெற்றமை கஹட்டோவிட்டாவின் வரலாற்றில் பதியப்பட்ட முக்கிய விடயமாகும்.

இன்று காலையில் வியாபாரிகள் தங்களது கடைத்தொகுதியை அமைப்பதில் ஈடுபாடு கொண்டுள்ளதுடன் பல்வேறுபட்ட வியாபாரிகளும் வருகைதந்த வண்ணமிருந்தனர்.

உள்ளூரில் இருந்து வெளியூர்களுக்கு சென்று மரக்கறி வாங்கியவர்களுக்கும் வெளியூர் பொல இற்கு சிரமத்தோடு சென்று வந்தவர்களுக்கும் ஊர்மக்களுக்கும் அயலூர்வாசிகளுக்கும் நிச்சயம் இந்த பொல வசதியானதாகவும் இலகுவானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதோடு இந்த அரிய வாய்ப்பை பூரணமாக பயன்படுத்தி ஏற்பாட்டாளர்களுக்கு மேலும் உற்சாகமளிக்கும் வகையில் ஒத்துழைக்குமாறும் வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.








(Luthufullah)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.