( மினுவாங்கொடை நிருபர் )

   மினுவாங்கொடை - கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து இம்முறை நான்கு மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகியுள்ளதாக, வித்தியாலய அதிபர் எம்.ரீ.எம். ஆஸிம் தெரிவித்துள்ளார். 

   இதன்பிரகாரம், முஹம்மது ரூமி முஹம்மது ரஸான் - கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்திற்கும், முஹம்மது மஃபூல் முஹம்மது மஸ்கர் - கொழும்பு பல்கலைக் கழகத்திற்கும் முகாமைத்துவப் பீடப் படிப்பிற்காகத் தெரிவாகியுள்ளனர். 

   இதேவேளை, முஹம்மது பர்ஸான் பாத்திமா பஸ்ஹானா - தென் கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கும், முஹம்மது தாஜுத்தீன் பாத்திமா சுமையா - கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கும் கலைப் பீடப் படிப்பிற்காகத் தெரிவாகியுள்ளனர் என்றும் அதிபர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.