அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநில செயலாளர் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர் எம்.ஜிஆர். மன்ற தலைவர் மற்றும் அகில இலங்கை அம்மா பேரவை தலைவர், அம்மா தாயகம் திரும்பியோர் நலப்பேரவை தலைவராகவும், சமூக மற்றும் அரசியல் சேவையாளரும், இலங்கை இந்திய உறவு பாலமாகவும் விளங்கிய எனது தந்தை மறைந்த மர்ஹும் இலங்கை நெய்னார் நினைவு தினம் மற்றும் அவர் பற்றிய சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

அன்னாருடனான உங்கள் அனுபவ பகிர்வு அவரைப்பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை எழுத்து மூலம் பகிர்ந்துகொள்ள கோருகிறோம்.

அவை நினைவு மலரில் பிரசுரிக்கப்பட்டு அம்மலர் வெளியீட்டு விழா இலங்கை தலைநகர் கொழும்பில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
நினைவு மலர் பூர்த்தியானதும் விழாவுக்குரிய திகதி தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் மேலான வழிகாட்டல்களை வழங்கி வைக்குமாறு உங்கள் அனைவரிடமும் வேண்டிநிற்கிறேன்.

தொடர்புகளுக்கு
Mob. :+94 772 629292
Mail: nainarimran@gmail.com

நன்றி
இவன்,
இலங்கை இம்ரான் நெய்னார்
தலைவர்
இலங்கை நெய்னார் சமூக நல காப்பகம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.